தேவையான
பொருட்கள்: அவல் - முக்கால் ஆழாக்கு காய்ந்த மிளகாய் - 2 தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன் கடுகு - கால் ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 முந்திரிப் பருப்பு - 4 உடைத்தது
செய்முறை வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அவலை நன்றாகத் தண்ணீரில் களைந்து, ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு சில மணி நேரம் ஊறவைக்கவும். பின் நீரை ஒட்ட வடித்து விட வேண்டும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய் உடைத்த முந்திரி இவற்றைப் போட்டு வறுத்து பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும். அடுத்து ஊற வைத்த அவலையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் துருவிய தேங்காயையும் சேர்க்கவும். இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி. இந்த உப்புமாவை சர்க்கரையுடனோ அல்லது சட்னியுடனோ உண்டால் சுவை மிகுதியாக இருக்கும்.